Saturday, December 12, 2009

ரஜினி 60!

ரஜினிக்கு சஷ்டியப்தபூர்த்தி . இனிமேலாவது கொஞ்சம் வயசுக்கு ஏத்தா மாதிரி நடிக்க உடுங்கப்பா.

உ:பல்லுசெட்டை மேல தூக்கிப் போட்டு வாயாலே கேட்ச் பிடிக்கலாம்.

Tuesday, December 8, 2009

The fork and knife fandango!

In 2004, I spent 3 weeks in London - and starved.
No, I'm not complaining about the bland, samey English cuisine as I tasted very little of it anyway.

The problem was, all 23 years of my life, till that point,I had tucked into my daily ration using my bare hands and when the occasion demanded, used a spoon. Never before had I been required to use such varied assortment of weaponry at the dining table.

On Day 1 of my stay, my senior Suja showed me the cafeteria and said, "Pick whatever you want, pay and join me at the table. OK?"

"OK",I said making a mental note to avoid anything that (a) contained meat or(b)had to be eaten using knife/fork.

Armed with plate, I inspected the counters. Rack after rack displayed sandwiches, salad, cut-fruits and other interesting and colorful objects. None of them passed by two-tier test. Suja had started her lunch when I was commencing Round No.3 around the cafe with nothing on my plate except 2 bars of chocolate.

Suja gave me a look from across tables and I hastily picked up what looked suspiciously like a doughnut, paid for my frugal lunch and joined her.I finished my chocolate and was about to pick up the doughnut-lookalike when I noticed a plate right in front of me contained the same thing.

The gentleman, whose plate it was, took out a knife and fork, sliced out a nice equilateral triangle, forked it and pushed it into his mouth. EGAD! I thought I could simply bite into it, vada-style!

With hordes of British lunchers around, I could not commit this faux-pas. When in Rome....

I picked up my knife and fork and started dissecting the distant-cousin-of doughnut.
After several attempts to cut a triangle, I surveyed the results of the mutiny on my plate with concern, conveyed my condolences to the dismembered doughnut and left.

In the evening, I ordered a large bowl of ice cream from Baskin-Robbins and finger chips from KFC. I was not sure how the British eater devoured his potato chip. I could picturise His Highness, the Son of a Hundred Earls, picking up one finger chip with tongs, slicing out a quarter mouthful with tweezers and stashing it into his mouth. I took my dinner to my room and ate heartily.

Moral 1: When in Rome, ask for room service.

Many years before that, I traveled as part of an audit team to Salem. One day, we had just finished our breakfast of pongal and dosas at the guesthouse, when in walked 2 Punjabi interns. Chap A switched on the T.V while Chap B ordered dosas for himself.

When the steaming dosas arrived, the chap started cutting it with a knife and fork.After a few failed attempts, he revised strategy. He moved his plate farther, attempted a full-arm action with plenty of follow through.

This time the piece of dosa did leap from the plate. But unfortunately , went nor'-nor'- east and landed in a neighbor's plate. Chap B, who was witness to this Waterloo, now turned to the waiter and said emphatically, "No dosa. Only pongal"

Moral 2: When in Rome, do what Romans do; but first test it on your partner.

In late 2005, the UK team played a return visit to Chennai. One NRI in the UK team was all eager to try South Indian cuisine. At lunch, he picked up his S.I tali- mounds of rice with cups of sambar, rasam, curd and curry.

The chap took one tablespoon of rice, dipped it in the sambar cup, mouthed it and let out an enthusiastic "Wow!".

After about 5 such tablespoons the "wow"s became less enthusiastic and more perfunctory.They disappeared completely after the 10th spoonful.Chap must have realised that at this rate, he will need another lifetime to finish lunch. He looked around him and saw spirited lunchers everywhere attacking their tali with bare hands.Chap continued his spoon ritual.

Unfortunately, I was not witness to the entire exhibition but learned second hand that the latter phase was just as entertaining as the initial one.

Moral 3: When in Rome DONT do what the Romans do - and end up becoming Public Exhibition No. 1 - a famished one at that!


A question: If it is simply a question of hygiene, then shouldn't you prefer your own hands (which you yourself have used/ washed/ disinfected/ dried) to spoons licked by at least 10 other people (ugh!) and cleaned by a complete stranger?

Sunday, December 6, 2009

காணி நிலம்..(கடைசி)

ஐயர் இப்போது என்ன செய்கிறார்? அவருடைய இந்திரா நகர் நிலத்தை விற்க புரோக்கரை ஏற்பாடு செய்து விட்டார். மகனுக்காக நிலம் வாங்கும் வேலையில் இறங்கி இருக்கிறார்.

கோவிந்து சொன்ன "பீச்சாங்கரை" நிலத்தை கூட பார்த்தார். என்னவோ மண் அரிப்பாமே? இந்த மண் அரிப்பினாலே மகாபலிபுரம் பீச் வருஷா வருஷம் உள்ள வருதாமே? இப்படியே போனா 2070 வாக்கிலே காஞ்சீபுரதுக்கே வந்துடுமாம். ஆராய்ச்சி எல்லாம் பண்ணிப் போட்டிருக்கான். ஐயர் கூட படிச்சார்.

ஐயருக்கு ஒரே ஒரு சந்தேகம். இந்த மண் அரிப்புல அவரோட நிலமும் தண்ணில போயிட்டா? அதெல்லாம் ஆகாதாம். இந்த "ஜகதம்பா கோவாபெரேடிவ் பில்டர்" நாலா பக்கமும் பெரிய அகழி மாதிரி போட்டுத் தர்றானாம்.

நல்ல காத்தோட்டம். சீப்பா கிடைக்கறது. ஜகதம்பா அவர் பாட்டி பேர் வேற! நீங்க என்ன சொல்றேள்?

Saturday, December 5, 2009

காணி நிலம் (2)

காஞ்சி ரொம்பவும் மாறி இருந்தது.

தானியங்கி கார்பரேஷன் வண்டி தெருக்களை சுத்தம் செய்து, மரங்களுக்கு நீர் பாய்ச்சியது. தெரு ஓரத்தில் எல்லா ஊர்களிலும் இருப்பது போல் மெட்டல்- டிடெக்டர்கள். பிராக் அணிந்த ஆண்களும் பனியன்-அண்ட்ராயர் அணிந்த பெண்களும் கும்பலாக அமர்ந்து தனித் தனியே செல்பேசினார்கள்.

மலாய்,லெபனீஸ், மெக்சிகன், ஒரிஎண்டல் சாப்பாட்டுக்கிடையில் ஐயர் இட்லியைத் தேடிக் கண்டுபிடித்தார். சந்தடி இல்லாத ஒரு சந்தில் ஒரு டீக்கடை தென்பட்டது.

அங்கே தினகரனுக்குப் பின்னால் இருந்த ஒருவரிடம், "ஏங்க! ஏர்போட்டுக்கு எப்படி போகணும்?" என்றார்.

டீக்கடை ஆசாமி தினகரனை மெல்ல கீழே வைத்து ஐயரை உற்று நோக்கினார்.
"ஏர்போர்ட்டுக்கு.. எப்படி.. போகணும்?" என்று சைகையிலும் கேட்டார் ஐயர்.

ஆசாமி எழுந்து ஓடி, சந்தில் மறைந்தார்.

"யாரோ லூசு போலிருக்கு.."

மற்றொரு தினகரனிடம் ஐயர் திரும்பினார். "சார்! பாதாள ரயில் ஏங்க ஓடுது?"

அவர் "அதோ!" என்று எதிரே இருந்த குட்டிச் சுவற்றைக் காட்டினார்.

"இங்கயா?" ஐயர் அதிர்ந்தார்.

அந்த சுவற்றில் மஞ்சள் போஸ்டர் "பாதாள பைரவி" பிரமிலா தியேட்டரில் ஐம்பது நாள் ஓடுவதை அறிவித்தது.

"பைரவி இல்ல சார். ரயில். தடம் எல்லாம் கூட புரளுமே..வெடிகுண்டேல்லாம் வேப்பாளே!" ஐயர் தெளிவு படுத்தினார்.

"தெரியாது" மறுபடி ஆசாமி தினகரனில் மூழ்கினார்.

ஐயர் யோசித்தார். "இவாள்லாம் வெளியூர் போல இருக்கு. அதான் தெரியலை. டீக்கடைக் காரரிடம் கேட்போம்"

"சார்! பளை ஓவர் எங்க இருக்கு?" என்றார்.
"கோயிந்து! சார் இந்திரா நகர்ல வோர்க்கு நடக்குது இல்ல? அதப் பாக்க வந்துக்கிறார். கூட்டினு போ" என்று அனுப்பி வைத்தார்.

...
இந்திரா நகரும் மாறி இருந்தது. முழு அத்துவானமாக இல்லாமல், முக்கால் அத்துவானமாக இருந்தது. மிச்ச "கால் வாசியில்" சுமார் நூறு குடிசைகள், இருபது எருமைகள், இருநூறு பொது ஜனங்கள்.

"இந்தா.."என்று கோயிந்து காட்டிய இடத்தில் நான்கு ராட்சச தூண்கள் முக்கால் எழும்பிய நிலையில் வானுக்கு கம்பி நீட்டிக் கொண்டிருந்தன.

"என்னப்பா? ப்லைஒவேர் எங்க?"

"இப்போதானே ஸ்டார்ட் ஆகி இருக்குது. இன்னும் பத்து வர்சம் களச்சு பாக்கணும்.."

"இன்னும் நாலு தூண் வருமா?"

"தா..இல்ல சார்! பெரிய பளை ஓவர் வரது. இப்படிக்கா போய் அப்ப்டீக்கா வரது.."

"அப்ப்டீக்கா" என்று கோயிந்துவின் கை, வரப்போகும் விமான நிலையத்தை இடித்துத் தள்ளியது.

"அங்கே ஏர்ப்போர்ட்?"

"அதான் டிராப் ஆயிடுச்சே? யாரோ வெளிநாட்டுக்காரன் ஏர்போர்ட் கட்டுறேன்னான்.. அப்பாலே ஏதோ குல்மால் ஆயிப்போச்சு. அவன் சுகுர்ராயி ஊருக்கு ஓடிப் போயிட்டான்.."

ஐயர் அப்போது தான் கவனித்தார். ரன்வே இருக்க வேண்டிய இடத்தில் சிறுவர்கள் நிர்பயமாக கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் எதோ ஒரு வித மணம் வருவதையும் உணர்ந்தார்.

ரயில் வரவேண்டிய இடத்தை கோயிந்து உதவியுடன் தேடிக் கண்டு பிடித்தார்.

அங்கே "Corporation Dumping Yard" என்று கோட்டை எழுத்தில் போர்ட் மாட்டி இருந்தது. தானியங்கி இயந்திரம் காஞ்சி மாநகரின் எல்லாக் குப்பைகளையும் கொண்டு வந்து அங்கே செவ்வனே கொட்டி இருந்தது. ஒரு கோடி ஈக்கள்.
வித்தியாசமான வாசனைக்கான காரணம் ஐயருக்கு புரிந்தது.

"ரயில் என்னப்பா ஆச்சு?"

"அது.. எவனோ கோர்ட்டுல ஸ்டே வாங்கிட்டான். கேஸ் நடக்குது கேஸ் முடிய பத்து வர்சம் ஆயிடும். அப்பால கார்பரேசன் காரன் இந்த இடத்த விட்டு போகணும்.அது ஒரு பத்து வர்சம்.."

"அது வரைக்கும்?" ஐயருக்கு கோபத்தில் உடல் நடுங்கியது.

கோவிந்து விஷயம் புரியாமல், "பஸ்லே போ!" என்றான்.

ஸ்கூல், ஐ.ஐ.டி என்றெல்லாம் கேட்டு, தன்னையே மேலும் வருத்திக் கொள்ள ஐயருக்கு மணம் இல்லை.

"பாவிகள்! இவர்களை நம்பி மொத்த சேமிப்பையும் போட்டுட்டேனே? இந்த குப்பைமேட்டை யார் வாங்குவா? வீட்டக் கட்டவும் முடியாம, விக்கவும் முடியாம..."

ஐயருக்கு ஒரு யோசனை. வந்தது தான் வந்தோம். நிலத்தை ஒரு தரம் பாத்துடுவோம். கிடைத்த ரேட்டுக்கு கொடுத்து தலை முழுகிடுவோம்..

அவரது காணி நிலத்தை கண்டுபிடிக்க இரண்டு மணி நேரம் ஆனது.

அங்கே .. அவர் வீட்டு வாச (இருக்க வேண்டிய இடத்தில்)லில், ஒரு நார்க்கட்டிலில் ஒரு உருவம் இழுத்..துப் போர்த்தி தூங்கிக் கொண்டிருந்தது.

"யாரடா அது?" ஐயர் அதட்டினார்.

போர்வை விலகி உருவம் எட்டிப் பார்த்தது.

"ஆ! கரடி!"

உருவம் மீசைக்கு இடையில் கொஞ்சூண்டு முகமும் வளர்த்திருந்ததால் கரடி இல்லை, மனிதன் என்று தெளிந்தார்.

மனிதன், "இன்னா?" என்றான்.

"பிளாட்டு..எனது.."

"டேய்! பரட்ட, போசு, தீவட்டி, சங்கிலி..." மீசை சகாக்களை அழைத்தது.

அடுத்த நொடி ஐயர் பல திசைகளில் இருந்து பல வித "இன்னா?"க்களால் சூழப்பட்டார்.

"ஹீ!ஹீ! ஒன்னும் இல்ல. சும்மா சுத்திப் பாத்தேன்..நீங்க தூங்குங்கோ..ஹிஹி! என்ன வெயில்" என்று திரும்பி நடந்தார். "இன்னா" செய்தாரை ஒருத்தல்!

சிறுவர்கள் விளையாடும் இடம் வரை ஏதோ யோசனையில் இருந்தவர் கோவிந்து கத்தியதை கேட்டிருக்க வாய்ப்பில்லை:

"சார்! பிளாட்டு வேணுமா சார்! அங்கே போல்பாரைல போட்டுக்கிறான். பீச்சாங்கை பக்கம் பீச்சு. சோத்தாங்கை பக்கம் ஹுண்டாய் ஸோ-ரூமு. ஊட்லேர்ந்து இறங்கி நேரா கார எட்துன்னு பீச்சுக்குப் போய்..சார்! சார்!"

காணி நிலம் (1)

"மனைகள் விற்பனை: வேகமாக வளர்ந்து வரும் காஞ்சியில்..மிக வேகமாக வளர்ந்து வரும் கோனேரிக்குப்பத்தில்....சகல வசதிகளுடன் கூடிய...நேரில் அணுகவும்.."

- ஐயர் இது போன்ற விளம்பரங்களை சில நாட்களாக தேடிப் பிடித்து படித்து வந்தார். "மனுஷனா பிறந்தா காணி நிலமானு இருக்கணும்" என்பது தான் அவர் கொள்கை.

காஞ்சி...அவரது இஷ்ட தெய்வத்தின் ஊர். அம்பாளே "வாடா" என்று அழைப்பது போல இருந்தது. அடுத்த நாளே "நேரில் அணுகினார்".

..

கோனேரிக்குப்பம் காஞ்சிபுரம் பஸ்- ஸ்டேண்டில் இருந்து நடந்தே போகக் கூடிய தூரம். ஐயர் மனதுக்குள் ஒரு டிக் மார்க் போட்டுக் கொண்டார்.

ஆனால் "சகல வசதிகள்" இருக்க வேண்டிய இடத்தில் இந்திரா நகர் ஐயரை வரவேற்பதாக அறிவித்த மஞ்சள் போர்டைத் தவிர ஏதுமில்லை.

அவருடன் கூட வந்த மருது ஐயருக்கு விளக்கினான்.

"அதோ..அந்தாண்ட புதர்க்காடா கீதுல்ல? அதுக்கப்பால புது ரயில்வே ஸ்டேசன் வருது. இப்பிடிக்கா ஒரு புறம்போக்கு நிலம் கீதா? இது தாண்டின உடனே ஏர்போர்ட்டு. அதோ நேரா ஒரு தூங்குமூஞ்சி மரம் மட்டும் கீதே? அதுக்கப்பாலே பளை ஓவர். ஓகேயா?"

ஐயருக்கு பரம ஓகே. இருந்தாலும் ஒரு சந்தேகம். "ரொம்ப சத்தமா இருக்குமோ?"
மருது சுதாரித்தான், "ச்சே!ச்சே! ரயிலு அண்டர்ல்ல ஓடுது. பாதாள ரயில்."

"ப்ளேன்?"

"உன்காண்டி ப்ளேன பாதாளத்துல உட முடியுமா? அது அப்பர்ல ஓடுது. அண்டர்ல ரயிலு, அப்பர்ல பிளைட்டு, ரோட்டு மேல பஸ்சு, காரு. புர்ர்தா?"

"சரி". இருந்தாலும் அவர் மனைவி "நல்லாப் பாத்து வாங்குங்கோ" என்று எச்சரித்து அனுப்பி இருந்ததால் சுற்றிலும் நன்றாகப் பார்த்தார். புழுதியைத் தவிர குறிப்பாக ஒன்றும் தெரியவில்லை. கீழே நன்றாகப் பார்க்கலாம் என்று குனிந்...

"ஐயே! பாம்பு" ஐயர் பதறிக் குதித்ததில் ரெண்டு காலும் மிஸ்டு கால்கள் ஆகி இருக்கும். "சாரப் பாம்பு, சார். ஒன்னியும் பண்ணாது. நீ நேசனல் ஜாகரபி பாக்கரதில்லா?" என்றான் மருது.

"இல்லேப்பா?"

"நீ காண்டி கம்முனு வா. ஒன்னியும் பண்ணாது"

அதற்கப்புறம் ஐயர் மருதுவின் திருவடி சரணம் என்று எதையுமே நல்லாப் பார்க்காமல் "கம்ன்னு" வந்தார்.

கொஞ்ச தூரம் போன உடன் மறுபடி சந்தேகம், "ஏம்ப்பா! இங்க ஸ்கூல், ஆஸ்பத்திரி எல்லாம்.."

"வருதே! நாம வர்ற வழியில மாடு மேச்சினு இருந்தாங்களே? அங்க தான் ஐ.ஐ.டி வருது. பக்கத்து தெருல பீ. எஸ் ஸ்கூலு. இப்புடி ரைட்ல போனியானா ஒரே ஒரு குடிசை வரும். அத்தாட்டி மாட்டாஸ்பத்திரி, மனுசாஸ்பத்திரி எல்லாம்.."

பிளாட்டின் மத்தியில் இருந்த குடிசைக்குப் போய் மருது மின் விளக்கைப் போட்டான். "பாத்தியா சார்.. கரண்ட்டு கூட வருது.."

அந்த இடத்தை நாகரீகம் தீண்டி விட்டது என்பதற்கு ஒரே சான்றாக இருந்த பல்பைப் பார்த்துப் பார்த்து ஐயர் மகிழ்ந்தார்.

பிளாட்டின் ஈசானிய மூலையில் பத்து பெரி..ய குழிகள். "ஏம்ப்பா! இங்க மரம் நடப் போறீங்களா?"

"சீ.சீ .. இது எதுனா பெருச்சாளி தோண்டி இருக்கும்."

இது வேறயா? ஐயருக்கு இன்னொரு சந்தேகம். "ஏம்ப்பா! இந்த நேசனல் ஜாக்ராபீ .."

"ம்ம்.."

"அதுல காட்றது இந்த ஊரைத்தானோ?"

"ஹ!ஹ! உன்னோட தமாஸ் சார்!"

தமாஸ் எல்லாம் முடிந்து, 2004 ஆம் ஆண்டின் ஒரு சுப தினத்தில் registration முடிந்தது. தன் சொச்ச சேமிப்பை போட்டு நிலத்தை வாங்கிய ஐயருக்கும் மிசஸ் ஐயருக்கும் சந்தோசம். மிக மிக வேகமாக வளரும் இடத்தில் காணி நிலத்து ஒனராகி விட்டோம்!



2032...


ஐயரின் பெண்ணுக்கு திருமணம் முடிந்து வெளியூர் போயாகி விட்டது பையன் வெளிநாட்டில்.

நகரேஷு காஞ்சியில் அவர் வாங்கிய நிலத்தின் விலையும் "நகரேஷு"வாக அப்படியே நின்றிருந்தது.ஆரம்பத்தில் தன் நிலத்தை அடிக்கடி போய் பார்த்து வந்தவர், பிறகு முடியாமல் விட்டு விட்டார்.

கொஞ்ச நாளாக மிசஸ் ஐயர்,"அந்த இடத்துல ஒரு சின்ன வீடா கட்டிக்கலாம்..போய் பாத்துட்டு வாங்கோ." என்று நச்சரித்துக் கொண்டிருந்தாள்.

ஐயருக்கு நிலத்தை விற்ற மருதுவும் அவன் கோஷ்டியும் ஜன சமுத்திரத்தில் அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் கரைந்து போயிருந்தார்கள்.
"அதனால் என்ன? பத்திரம் தான் பேஷா இருக்கே? எட்டு ஊருக்கு நிலத்தை கண்டு பிடிசுடலாமே?"

ஐயர் மறு நாளே காஞ்சிபுரம் சென்றார்..

(அடுத்த பதிவில்..)

Wednesday, December 2, 2009

இஸ்கூல் ...

பயல் ப்ளே- ஸ்கூல் போக ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆச்சு. போன வாரம் ஒரு எல்.கே.ஜி பையனோட அப்பா, டீச்சர் கிட்ட கேக்குறார்: "வீக் ச்டூடண்டுக்கு எல்லாம் தனியா கிளாஸ் எடுங்களேன்"

- அடப்பாவி! உன் பையன் வீக் ஸ்டூடண்டா இருந்தா, வீட்டுக்குப் போய் ஹார்லிக்ஸ் கீர்லிக்ஸ் போட்டுக் குடு. ஏன் அநியாயமா இன்னும் பத்து பேரக் கோத்து விடுற?

இப்பவே, ஒரு பலூனோ டைரி மில்கோ தினம் தண்டம் அழ வேண்டி இருக்குது.
ஸ்கூல் - பேகை தூக்கிட்டு , "இப்பி போ" "அப்பி போ" ன்னு நம்மை வீட்டுக்கும் போகாம, ஸ்கூலுக்கும் போகாம இதயம் நல்லெண்ணெய் வாங்க மறந்தவ மாதிரி சுத்த விட்டுடறான்.

இதுல ஒரு நாள் இவன் பையத் தெறந்தா, "ஹோம்-வொர்க்" அப்புடீன்னு ஒரு பேப்பர்! "colour with crayons" ன்னு அரச கட்டளையோட வட்டவட்டமா ஒரு என்னவோவை வரைஞ்சு அனுப்பி இருக்காங்க!

ஹூம்! பயல் கையப் புடிச்சு "கலர் அடி" ன்னா ரெண்டு செகண்டுக்கு மேல ஒரே கலரா அடிக்க மாட்டானாம். மூணு வட்டத்த சுமார் பன்னண்டு கலரால சகட்டு மேனிக்கு அடிச்சு, என்னவோவை நிரப்பி முடிச்சோம்.

இன்னும் கொஞ்ச நாளிலே ஸ்கூலுக்கு போகணும்னாலே "தலை வலி", "வயத்து வலி" எல்லாம் வர்ற ஆரம்பிச்சிடும். ஆங்! அது என்னது? "ஸ்ட்ரெஸ்" அதுவும் வந்துத் தொலைக்குமோ என்னவோ? எப்படியாவது அந்தப் பதிவை எழுத்துக் கூட்டி இன்னும் ரெண்டு நாளிலே படிச்சி முடிச்சிரணும்! (ஹோம்-வொர்க்!)

Thursday, November 26, 2009

வாங்க ரீமேக்கலாம்..

காக்கா-வடை கதைய ரீமேக் பண்ணச் சொல்லி சில டைரேக்டர்களிடம் கேட்டோம்.

ரொம்ப மெது..வடை!
டைரக்டர்: சேரன்

கதை: பாட்டிக்கிட்டே இருந்து வடையை எடுத்துட்டுப் போய் காக்கா மரத்துலே உட்காருது. அடுத்த நாலு மணி நேரம் பாட்டியும் காக்கையும் லெட்டர் அனுப்பிகிட்டே இருக்காங்க. இடையிலே போஸ்ட்மன் நரியுடைய பழைய டாவுகள் ஏழு பெரும் பிளாஷ் பேக்கிலே வர்றாங்க. அப்புறம் இண்டர்வல்.

அப்புறம?

அதுவரைக்கும் எடுத்தா போதும் சார், அதுக்கப்புறம் தியேட்டரிலே யாருமே இருக்க மாட்டாங்க.


மசாலா வடை!
டைரெக்டர்: ஷங்கர்

கதை: நிலாவிலே பாட்டி வடை சுடுறாங்க. ஒரு லட்சம் காக்கைகள் வடைகளை திருடிட்டு போயிடுதுங்க. நரி வந்து அநியாயம் செய்யுற ஒவ்வொரு காக்காயையும் தேடித் புடிச்சு பேசியே கொல்லுது. "அஞ்சு அஞ்சு காக்கா அஞ்சு அஞ்சு வடையா திருடினா தப்பா"ன்னு கேக்கும் பாருங்க, தியேட்டரிலே அப்ப்ளாஸ். பத்து கோடி பட்ஜெட்டிலே ஒரு பாட்டு. மிச்ச செலவெல்லாம் நிலாவுக்குப் போனப்புறம் பாத்துப்போம். ஆமாம், மொத்த படமும் நிலாவுலே தான் நடக்குது.

காக்கா! காக்கா!
டைரெக்டர்: கமல்

கதை: வடைகளைப் பத்தி ஆராய்ச்சி செய்யுற ஒரு பாட்டி. அவங்க கிட்டே இருந்து அதை திருட, அமெரிக்க உளவு நிறுவனம் காக்கையை அனுப்புது. நேர்மையான போலீஸ் ஆபீசரா நரி. கிளைமக்சிலே நரி குறி பாத்து சுட, காக்கா வடைய கீழே எண்ணைச் சட்டியிலே போட்டுடுது. உலகத்தை காப்பாத்தின நரிக்கு ஒபாமா கப்பு குடுக்கிறார்.

படத்தின் ஹீரோ கமல் என்பதால் பாட்டி, நரி, காக்கா வேஷம் தவிர மரம், எண்ணைச் சட்டி , கரண்டி வேஷம் கூட அவரே போடுறார். வடை வேஷத்துலே ஒரு பாட்டு கூட பாடுறார்.

கரிசல்காட்டு வடை!
டைரெக்டர்: பாரதிராஜா
கதை: என் இனிய தமிழ் மக்களே!..

சரி, கதைக்கு வருவோம்!

இந்தக் கரிசல் பூமியிலே ஒரு தமிழச்சி வடை சுடுகிறாள். அதை இந்த மண்ணில் பிறந்த ஒரு காக்கா தூக்கிட்டு போகிறது. இடையிலே வரப்புத் தகறாருலே காக்கா வடைய பாட்டி மேல போட, பாட்டி விழ, போலீஸ் காக்காய அரெஸ்ட் பண்ணிட்டு போகுது. முறைப்பொண்ணு நரி போலீஸ் ஜீப்புக்குப் பின்னாலேயே ஓடிட்டே போகுது.

இன்னும் அந்த மண்வாசனை மிக்க வடை, தன்னை சுட்ட பாட்டிக்காகவும், பாட்டிகிட்டே இருந்து சுட்ட காக்காவுக்காகவும் இந்தக் கரிசல் மண்ணிலே காத்துக் கிட்டே.......இருக்கு.

குளோஸ்-அப்பில் வடையை காட்டுறோம்.
A film by Baarathiraaja

அவார்ட் நமக்கு தான் சார்!