Monday, September 28, 2009

கந்த சாமி..

எனக்கு ரொம்ப வயசாகி விட்டதோ? கந்தசாமி படம் பார்த்த போது இப்படித்தான் தோன்றியது.
பின்னே? கமர்ஷியலாக ஹிட்டான ஒரு படத்தை சுமார் ஒன்றரை மணி நேரம் பார்த்த அப்புறம் ஒண்ணுமே புரியலைன்னா என்ன அர்த்தம்?

என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் படத்தில் விக்ரம் முகத்தில் ஏதேதோ கலர் அடித்து, ரகுவரன் மாதிரி ஒரு போர்வையையும் போர்த்திக் கொண்டு , என்னமோ வேஷத்தில் (சேவல் கெட்டப்பாம்!சேவல்கள் எல்லாம் விக்ரம் மேல் மான நஷ்ட வழக்கு போடப் போவதாகக் கேள்வி) வந்து வழக்கமான சண்டையைப் போடுகிறார்.

ஸ்ரேயா ஒன்று டிரெஸ்ஸைப் போட்டு, அப்புறம் அதைக் கிழிக்கிறார். இல்லன்னா கிழிச்சிட்டு அப்புறம் போட்டுக்கறார். "போட்டுகின்னு கியிசிக்கலாம்...கியிச்சிகின்னு போட்டுக்கலாம்.." என்று பிரபுதேவா பாட்டு மாதிரி. ஒரு வேளை படத்தோட பேரைத் தப்பா புரிஞ்சிட்டாரோ ?

சிரேயாவின் ஆட்டமே தேவலாம் என்கிற மாதிரி காமெரா அப்படிஒரு ஆட்டம் ஆடுது. ஒரு நிமிசத்துக்கு மேல் யாரும் தலையைப் பிடிச்சிக்காம படத்தைப் பார்க்க முடியாது.

பாவம் காமெராமேன் யாரோ? கூட இருந்தவங்களாவது ஓடிப்போய் அவர்கிட்ட ஒரு சாவிக்கொத்தைக் கையிலே கொடுத்திருக்கலாம் இல்லையா?
இப்போ யார் அவஸ்தைப் படறது?

2 comments:

geetha said...

kandhasmai padthai thittalama? karthik padithal kadupagaporan!!!!-geedhu

Sairam Gopalan said...

karthik emailae Vikram's seeyon name ? Poochu poo Anu !!

- Sairam