Tuesday, June 30, 2009

ஒரு மூக்கின் கதை!

யானை இறந்தாலும் ஆயிரம் பொன்! மைக்கேல் ஜாக்சன் செத்தப்புறம் அவருடைய வீடியோக்களுக்கு ஏக கிராக்கி! அடியேனும் அவரைப் பற்றியும் அவர் மூக்கைப் பற்றியும் முதல் முறையாக நெட்டில் படித்தேன்!

இந்த ஜைனத் துறவி போட்டோ பிளாஸ்டிக் சர்ஜரிக்குப் பின் எடுக்கப் பட்டது போலும்! ஜக்சனுக்கும் அவர் டாக்டருக்கும் நடந்த உரையாடல்:

"என்ன இது! மூக்கு எங்கே?"
"இந்த சாக்கு மூட்டைக்குள்ள பத்திரமா இருக்கு. கவலைப் படாதீங்க. இப்போதான் மிச்ச சொச்சத்தை ஒய்ட் சிமென்ட் போட்டு அடச்சிருக்கோம்."

"இப்போ மூச்சு எப்படி உடறது?"
"மூச்சு ? மூக்கிலே ரெண்டு ஓட்டையையும் பென்சிலாலே தான் எழுதி இருக்கேன். மூச்சு விடறத்துக்கு மூக்கு எதுக்கு? அதான் இவ்வளவு பெரிய வாய் இருக்கே? உங்களுக்கு மூச்சு முக்கியமா? மூக்கு முக்கியமா?"

"இதுக்குத்தான் பணம் வாங்கினியா?"

"என்ன! இப்படி மூக்கு மேல கோவம் வரது உங்களுக்கு! ஜாக்கிரதை! அப்புறம் மூக்கு உருகிடும்!"

"இந்த மூக்கை வெச்சு நான் என்ன செய்றது?"

"ஏன்? இப்பவும் மூக்கு பிடிக்க சாப்பிடலாம். மூக்கு மேல விரல் வெச்சு ஆச்சர்யப் படலாம். ஆனா பாத்து சுண்டு விரல மட்டும் வைங்க!"

"டாக்டர்! இந்த விஷயம் காதும் காதும் வேச்சாப்பலே நமக்குள்ளே இருக்கட்டும்!"

"காதுன்னதும் தான் நினைவுக்கு வரது! கத்தியை உங்க மூக்கிலே வெச்சதுமே, சென்னை கார்பரேஷன் ஸ்கூல் கட்டடம் மாதிரி மூக்கு பொலபொலன்னு உதிர்ந்து விழுந்துடுத்து! ஒட்டுப்போட ஒண்ணுமே இல்லாததாலே, காதைக் கிழிச்சி தான் மூக்கிலே தையல் போட்டிருக்கு. கொஞ்ச நாளைக்கு எந்த ரஹஸியமா இருந்தாலும் இடது காதை குடுக்காதீங்க!"

"அப்போ அந்தக் காது?"

"கேக்-காது!"

இந்தப் படத்தை பக்கத்து வீட்டுப் பெரியவரிடம் காட்டினேன். தடால் என்று எழுந்து நின்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.


ஜாக்சன் மட்டும் அப்போது இந்தியாவில் இருந்திருந்தால் அவருக்கு வடை மாலை சார்த்தி, வாயிலே வெண்ணைக் காப்பு வைத்து, வாலிலே (இல்லாவிட்டால் தொலைகிறது, காலிலே) கீழிருந்து மேலாக குங்குமப் பொட்டு வைத்திருப்பார்கள். அவருக்குக் கொடுத்து வைக்கலை!

அது சரி! மூக்கு பெரிசா இருந்தா ஏன் சின்னது பண்ணனும்? நம்ம சோஹா அலி கான் இல்லையா? சிலருக்கு மூக்கு பெருசா இருக்கும். சோஹா மாதிரி சிலருக்கு தும்பிக்கை சின்னதா இருக்கும். அதப் பத்தி எல்லாம் மேடம் கவலையே படலையே ?

நமக்குத் தெரிஞ்ச ஒருத்தர் கூட தும்பிக்கை கேஸ் தான். அவசரத்துக்கு சாக்ஸ், கர்சீப் எல்லாம் கூட மூக்கிலே கிளிப்பைப் போட்டு காய வைத்துக் கொள்வார். இருட்டிலே குட்டி டார்ச் லைட்டை மூக்கிலே பிக்ஸ் பண்ணிவிட்டு கை வீசி நடப்பார்! ஆபீசிலே இவர் தூங்கும் போது பென் ஸ்டாண்ட் என்று நினைத்து நாசித் துவாரத்தில் எல்லாரும் அவரவர் பேனாவை சொருகி வைக்க, எல்லாத்தையும் பத்திரமா வீட்டுக்கு சுருட்டி வந்து விட்டார்!

இவ்வளவு சௌரியம் இருக்கு! எதுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி?

Monday, June 29, 2009

ஒரே ஒரு ஊரிலே..(6)

"நான் எப்புடி செத்தேன்? மரியாதையா சொல்லிடு" அப்படீன்னு இந்த இருளான் ஆவியா வந்து மிரட்ட ஆரம்பிச்சிட்டான்! அது தான் எப்படியாவது கதையை முடித்துத் தொலைப்பது என்று சோம்பல் படாமல் உட்கார்ந்து விட்டேன்!

.........

பூசாரி பானுவுக்காக நேரம் ஒதுக்கத் தயாராக இல்லை.

"நடை சாத்தணும். ஊட்டுலே பொண்ணு காத்துட்டிருக்கும்" என்று பறந்தார்.

"குங்குமம் கிடைக்குமா?" என்று பானு பணிவாகக் கேட்க, ஒரு பெரிய குண்டாவில் கைப்பிடி அள்ளினார்.குண்டாவிற்குள் தகடு போல் தென்பட்டது.
குங்குமம் கொடுத்ததும் பானுவை அனுப்பிவைத்தார்.

வினு இங்கேதானே பக்கத்தில் ஏதோ ஒரு வீட்டிற்குள் இருப்பான்? (பக்கத்து என்றால் மலையூரில் சுமார் நூறு மீட்டர்) . போய்ப் பார்க்கலாமா?

.....

பாண்டு டீக்கடை முன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான். சகாக்கள் எல்லோரும் தேன் எடுக்கப் போறேன், பாம்பு பிடிக்கப் போறேன் என்று கிளம்பிவிட, "ரேஷ்பெட்டான" வேலைக்குத்தான் போவேன் என்று சபதம் எடுத்திருந்ததால் பெரும் பொழுது டீக்கடை முன் கழிந்தது.
கேள்வி கேட்பவர்க்கு, "அப்புறம் படிச்ச படிப்பு என்னாவது" என்று பதில் கேள்வி கேட்பான் .(பத்தாவது முடித்து சுண்டைக்காய் அஞ்சல் வழி டிப்ளோமா வாங்கி இருந்தான்.)

இருளான் இருந்தவரை வேலைக்கு முயற்சி மட்டுமாவது செய்து கொண்டிருந்தான். மூக்கனைப் போல் இந்த மலை விட்டே ஓடி விட வேண்டும் என்பதே இவன் சமீப கால லட்சியம். அதற்கு வேலை வருவதற்குள் இருளானும் போய் சேர்ந்தாச்சு!

தூரத்தில் காலையில் பார்த்த அந்த சுடிதார் பெண்!
"வணக்கம், மேடம்!" என்று அறிமுகம் செய்து கொண்டான்.
"எப்படியாவது இவங்களைப் புடிச்சு சென்னைல போய் செட்டில் ஆயிடனும்" என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

அடுத்த அரை மணியில் மலையூர் சரித்திரம, பூகோளம் எல்லாம் பானுவிடம் ஒப்பித்தான். பானு அவன் சொன்னதை நோட்பேடில் எழுதிக் கொண்டாள்:

"
மலையூரில் எந்தக் குற்றத்துக்கும் சாமியாடி விதிக்கும் அபராதம் தான். அதிகபட்ச அபராதம் பதினாலு ருபாய். ( வினுவிடம் சொன்னால் ஆண்டுச் சந்தா எங்கே கட்டணும் என்று விசாரிப்பான்.)

வெள்ளிக் கிழமை சூரியன் அஸ்தமித்ததும் சாமியாடி தன் வீட்டில் பூசையெல்லாம் முடித்து கோயிலுக்கு வரும் பொது இருட்ட ஆரம்பித்து விடும். சுமார் ஒன்பது மணிக்கு பூசாரி உடுக்கடிக்க ஆரம்பிப்பார். ஊர் ஆண்கள் எல்லோரும் கோவிலில் ஆஜர் ஆக வேண்டியது.

"அவுங்கவுங்க சாமி கும்பிட்டு பிரசாதம் வாங்குவாங்க. யாராச்சும் அபாராதம் கட்டணும்னு குறி வந்துச்சுன்னா கட்டிடுவாங்க. சாமியாடி ஒவ்வொருத்தரா ஆசீர்வாதம் செஞ்சு அனுப்புவாரு. கடேசியா தலையாரி, பூசாரி அப்புறம் சாமியாடிக் கெழவன் மட்டும் தான் இருப்பாங்க. கோவிலப் பூட்டி ஒரு சாவிய தலையாரி கிட்ட குடுத்துட்டு கிளம்ப பன்னெண்டு, ஒரு மணி கூட ஆயிடும்."

"இருளான் நேத்து பூஜைக்கு வந்தாரா?"
"ஐயோ! அவன் இதுக்கெல்லாம் வர மாட்டான். ஏதோ மூட நம்பிக்கை அப்புடீம்பான்."
" யாரும் கேட்டதில்லையா?"
"அஞ்சு ரூபா அபாராதம் போட்டாங்க. வாரா வாரம் பூசை எல்லாம் முடிஞ்சதும் வந்து கட்டிடுவான்."

"பரவா இல்லையே! வேற யாராவது இப்படி செய்யுறவங்க இருக்காங்களா?"

"அதெல்லாம் எப்போவாச்சு. இப்போ நேத்து நான் கூட திண்டுக்கல் வரைக்கும்போயிட்டு வந்தேன். லேட் ஆயிடுச்சு. போய் பணம் கட்டிட்டேன்ல!
எம்வேலை விஷயமா அடிக்கடி போக வேண்டி இருக்குது" என்று தன் தேவையையும் சந்தடி சாக்கில் சொல்லி வைத்தான்.

"நேத்து நீங்க போன போது இருளான் இருந்தாரா?"
"ம்ம். சரியா தெரிலீங்களே! நீங்க டீ சாப்புட்டீங்களா?" என்று உபசரித்து "நான் இதோ இங்கதான் நிக்கிறேன்" என்று பின் பக்கம் மறைவாக நின்று சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

"மேடம்! இங்கயா இருக்கீங்க" என்று வினுவும் வந்து சேர, டீக்கடை பக்கம் இருந்த மரத்தடியில் இருவரும் உட்கார்ந்தனர்.

வினு பானுவின் நோட்சை படித்துவிட்டு, "மேடம்! நமக்கு தேவை கவர் ஸ்டோரி. அதுக்கு இந்த மேட்டர் போதும். அந்தாளு எப்படி செத்தா நமக்கென்ன? ஒரு போட்டோ வேணும்னா வாங்கிக்குவோம். இப்போ மணி ஒண்ணு. கிளம்பி ராமர் வீட்டுக்குப் போய் டிபனுக்கு ஆட்டையப் போட்டுட்டு கிளம்ப சர்யா இருக்கும்,வாங்க!" என்றான்.

பானுவுக்கும் அது சரி என்றே பட்டது. நான் செய்வது guesswork.
என் ஊகம் தவறாகவும் இருக்கலாம். மூன்று மணி நேரத்தில் என்ன கண்டுபிடிக்க முடியும்?

"ஏங்க! இருளான் போட்டோ இருக்கா?" என்று பாண்டுவிடம் கேட்டால்.

"ஒ ! நாங்க ரெண்டு பெரும் சேந்து எடுத்துக் கிட்டோம். இந்தாங்க!" என்று பாக்கெட்டில் இருந்து தன் ஒரே புகைப்படத்தை நீட்டினான்.

போட்டோவை வினு வாங்கிப் பார்த்தன். "அட! பேருக்கு சம்மந்தமே இல்லாம நல்ல செவப்பா இருக்கானே! ஒரு அரவிந்த சாமிய அடுப்புல வெந்த சாமியா ஆக்கிட்டாங்களே!" என்றான்.
"வினு! ஒருத்தர் தீயிலே கருகி செத்துப் போயிருக்கார். இப்படி ஜோக் அடிக்கறது கொஞ்சம் கூட.."
"நல்லாவே இல்லை! சாரி மேடம்! சாரி சர்!" என்று போடோவுக்கும் மன்னிப்புக் கேட்டான். "பார்ரா! சிலுவைப் பார்ட்டி மேடம்! செயின்ல தொங்குதே!" என்று போட்டோவை பைக்குள் வைக்கப் போனவனுக்கு சட்டென்று பொறி தட்டியது.

(தொடரும்)

Saturday, June 27, 2009

Mera Bharat Mahan!

I'm impressed! Terribly impressed!

There was a time when I supposed that all Government organizations were mangy,moldering messes and Government servants, maladroit, migraine-causing misfits! Not so anymore!

In 2005, when I joined the tax practice of a Big4, I had to choose between income taxes division and indirect taxes division (excise & customs). I chose the former as I was told that it was less actively involved in aiding and abetting unfair practices compared to the latter!

My first visit to the Income Tax Department did nothing to alter my mistrust :stack upon stack of Manila files proudly declaring that they have been lying there since AY 1999, files (those not stacked, for whatever reasons) strewn about everywhere, pen pushers calling out to fellow pen pushers ("Mr. Chaudary's AY 1997-98 file ekkada petkuntaadu?"). There were 3 Assessing Officers, out of whom , two gentlemen did nothing but put their signatures on tax returns and strived to clear the mount-high stack of papers on their desks!

By evening, the attendant will re stack the AO's desk with the next bunch of tax returns!

(The third AO was permanently on leave! Must have got writer's cramps!)

Of course, one did spot a couple of PCs. But I had a strong suspicion that the AOs used them only to play solitaire.

One could sense the ample scope the system offered to anyone who wanted to evade the law to come and help himself! How the heck these people ever managed to find anything they needed beneath all the mess!

My firm also specialized in company affairs and had a resident Company Secretary who constantly bragged of his ability to wangle anything from the Company Affairs Department by means of small talk and occasional Diwali gifts! In fact much of what he achieved in his profession could be attributed to his camaraderie with the Department's malcontents than to any display of his knowledge of the law!

J.K Rowling would have dubbed the tax consultancy as "the dark arts" and its purveyors, the "You-Know-Whos" of the accounting profession.

Not so anymore!

The MCA 21 project launched by the Ministry of Company Affairs (in 2005, I think) was a watershed! Soon, the entire business of setting up a company could be done in under 2 days, that too without ever stepping out of your room! Yours truly was involved in setting up a company at that time and I found the system (though still in its nascent stage) very effective!
Of course, it was not entirely free of bugs. But MCA 21 had a friendly help desk that sorted out my problem in minutes . And, yes NO extra payment, official or otherwise, was ever required!

The Income Tax Department too started on a computerisation drive at that time, but considering the sheer volume of work, I didn't believe any good will come out of it.

Now, in 2009, my husband has received an e-mail from the IT department, quoting his PAN number, listing his income from various sources and the taxes deducted from them during the year,his tax computation and the balance taxes payable for the year. All this, a good one month before the filing date!

All he now has to do is to pay the balance amount online and file his return (online as well!)

If the IT department has managed to get that kind of information about every tax payer, it is a phenomenal achievement!

As you know, 80% of the people who are guilty of non payment of taxes are really simple honest souls who are either ignorant or want to be left out of the tangled bureaucratic web! Sprucing up the system will definitely bring these people within the tax net.

As for the remaining 20% (who would probably account for bulk of the black money), it requires more than just automating the tax department: I don't suppose that we will ever produce an Assessing Officer who would look Mayawati in the eye ( a feat that even her Maker will not dare to attempt) and demand her dues! But, may be in the next 10 years, we may have a recorded mettalic voice politely saying, "Tax Clearance Certificate number, please" to Mayawati before accepting her nomination papers!

Wednesday, June 24, 2009

இது ஏமி கஷ்டம்!

தெலுங்குப் பெண்மணிகளின் பக்தியை யாராலும் மிஞ்ச முடியாது. வாரா வாரம் ஏதோ ஒரு விரதம் என்று கையில் ஒரு பிளாஸ்டிக் கவருடன் வந்து விடுகிறார்கள். மஞ்சள், குங்குமம், தேங்காய் இத்யாதிகள் அடங்கிய ஒரு மினி பெட்டிக்கடை அந்த பை.

முதல் முறை இந்த பக்த சிரோமனிகளின் ஊர்வலம் வந்த போது, நான் ஊருக்கு புதுசு.
உள்ளே வந்த அம்மாள் கையில் கொஞ்சம் அரிசியைக் கொடுத்தார். வாயில் போடப் போகும் முன், தடால் என்று காலில் விழுந்தார். "ஹா" என்று நான் இரண்டு அடி பேக் அடித்தேன்.

"பிளேட் உந்தா?"
"என்துதான்! உள்ள இருக்கு"
"தீசுக்கு ரண்டி "
"அந்த மாதிரி கரண்டி எல்லாம் இல்லையே?"

பக்கத்து வீட்டு அம்மாயி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்: ஒரு பிளேட் எடுத்துட்டு வாங்க!

கொண்டு வந்த பிளேட்டில் பூ, பழம், கடலை(!) ஏதேதோ ஐட்டங்களை வைத்து நீட்டினர்! எனக்கு இந்த விளையாட்டில் எப்போதும் குழப்பம்: எந்தெந்த ஐட்டம்களை எங்கெங்கு வைப்பது?

உ: குங்குமம்!

சிலர் இதை நெற்றியில் நாசுக்காக வைப்பதோடு நிறுத்துகிறார்கள். சிலரோ முன் நெற்றி, நடு நெற்றி,வகிடு, கழுத்து, தாலிச்சரடு, கண், மூக்கு என்று சகட்டு மேனிக்கு கண்ட இடத்தில் அடித்து "சிவப்பு கலரு ஜிங்குச்சா" வாக மாறிவிடுகின்றனர்.

இதேபோல் சந்தனத்தையும் அருள் பார்வையால் கடாக்ஷிப்பவர்களும் இருக்கிறார்கள்;தொண்டை கரகரப்பிற்கு விக்ஸ் தேய்ப்பது போல் தேயப்பவர்களும் இருக்கிறார்கள்.

(நான் பெரும்பாலும் பக்கத்து பிளேட்டை பார்த்து பிட் அடிப்பது வழக்கம். தனியாக மாட்டும் போது தெரியாத ஐட்டம்களை சாய்ஸில் விட்டு விடுவேன்.)

போன வாரம் மங்கள வார விரதம் என்று இரண்டு தல்லிகள் கவரைத் தள்ளிக் கொண்டு வந்தார்கள்.
(மங்கள வாரவிரதமா? எப்போ? என்று கேட்கும் அஞ்ஞானிகளுக்கு: சோம வார விரதத்துக்கு அடுத்த நாள்!)

வழக்கம் போல் சமத்துவபுர தாம்பூலத் தட்டை நீட்டினர். நான் தெரிந்த வஸ்துக்களை முதலில் அட்டெம்ப்ட் செய்து கொண்டிருந்த போது, பள பளவென்று ஒரு கத்தியை நீட்டினர்!

பக்கத்து வீடோ பூட்டி இருந்தது!

"கார்பறேஷான்பிகே!"
(குல தெய்வம்தான். பயத்தில் நாக்கு சிலிப் ஆகி விட்டது!)

இதற்குள் கூட வந்த அடி பெண் (அடியாளின் பெண் பால்) முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்தாள்! ஓஹோ! செத்தப்புறம் கண்ணாடில வேற பாக்கணுமா?

முதல் மாதரசி "காஜல்" ன்று சொன்ன பிறகு தான் மூச்சே வந்தது!

பாவிகளா! இவ்வளவு பெரிய கவர இருக்கு! மை வைக்க டப்பா,
கிப்பா இல்லையா? கத்தி முனைலையா வெப்பாங்க?

Sunday, June 21, 2009

ஒரே ஒரு ஊரிலே..(5)

வினுவுக்கு இந்த மாதிரி கடலை சமாச்சாரங்களில் மச்சம் உண்டு. உள்ளே ஒரு சுமாரான பெண் இருப்பதாக "குன்சா" சொல்லிவிட்டாலும் உண்மையில் இருந்தது இரண்டு சு. பெண்கள்.

"வீட்ல யாரும் இல்லீங்களா?" என்று வாசல் படியில் நின்று வினு இரைந்தான்.

"ஏன், நாங்கல்லாம் மனுசங்க இல்லையா?" என்று இடக்காக பதில் வந்தது.

"ஹீ..ஹீ பெரியவங்க இல்லையான்னு கேட்டேன்.."

"ஓஹோ! இவரு சம்மந்தம் பேச வந்திருக்காப்பலே, பெரியவங்க கிட்டதான் பேசுவாராம்!" என்று ரெண்டாவது பெண்ணும் சேர்ந்து கொண்டது.

"ஏன் இப்படி தனியா வந்திருக்கற ஒரு சின்னப் பையன ரெண்டு பெரும் கூட்டணியா ஓட்டறீங்க " என்று வழிந்தான் வினு.

"ஏய்! இருளண்ணன் வீட்டுல போட்டோ புடிச்சாருல்ல அவுருடி!" என்று முதல் பெண் அடையாளம் கண்டு கொண்டது.

"உள்ள வாங்க"
"நீங்க சகோதரீங்களா?"
"பிரெண்டு! நான் அடுத்த தெரு. இவ அப்பா கோவில் பூசாரி!"
"உங்கப்பா என்ன செய்றாரு?"
"சாமியாடுவாரு"
வினு அரண்டான். "இல்ல.. நான் என் விஷயத்தக் கேக்கலை. பொதுவா ஜீவனோபாயத்துக்கு என்ன செய்வாருன்னு கேட்டேன்"

"என்ன பாயம்?"

"ஜி- ஜீரகம், வ - வறுகடலை.. அடச்சே! பொழப்புக்கு என்னம்மா செய்வாரு?"

"அதான் சொன்னோம்ல! சாமியாடின்னு. யார் யாரு தப்பு செய்றாங்களோ அவுங்களுக்கு அபராதம் போடுவாங்க. குறி சொல்வாங்க.."

"கற்பூரத்த முழுங்கிட்டு மலை ஏறுவாங்க" என்று முடித்தான் வினு.

"உங்களுக்கு எப்புடி தெரியும்?"

"எத்தன நாட்டுப்புறத்து படம் பாத்துருக்கோம்?"

"ஆங்! ரொம்பதான் அலட்டிகிறாங்க. நான் வரேன்" என்று அந்தப் பெண் விருட்டென்று வெளியேறியது.

"நாட்டுப்புறம்" என்ற சொல் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப் படவேண்டியது என்று வினு மனதில் குறித்துக் கொண்டான்.

"நீங்க போட்டோ புடிப்பீங்களா" என்று பூசாரியின் மகள் கேட்டாள்.
"ஒ. உங்களை படம் புடிக்கணுமா?"
"ஆமாம். இருங்க." என்று உள்ளே போய் ஏதோ பெட்டியை திறக்கும் சத்தம் கேட்டது.

சிறிது நேரத்தில் வெளியே வந்த அந்தப் பெண்ணின் கழுத்தில் தங்கச் சங்கிலி!

"இப்போ புடீங்க" என்று தலையை கோதிக் கொண்டு தயார் செய்து கொண்டது.

வினு காமெராவில் இரண்டு, மூன்று கிளிக் செய்தான்.
மெதுவாகப் பேச்சு கொடுத்தான்.

"இருளண்ணன் உங்களுக்கு ரொம்ப பழக்கமோ?"

"ம்ம்.. டியூசன் எடுப்பாரு. காலைல நான், பாப்பா அப்புறம் எல்லாப் புள்ளைங்களும் அவரு வீட்டுக்கு போவோம். அவரு கிட்டதான் சீப்பு இருக்கு"

"தலை சீவி விடுவாரா?"

"ஐயோ! சீப்பு வண்டி! ஸ்கூலுக்கு போகணும்ல? கீழ கொண்டு விடுவாரு. அங்கிருந்து பஸ் பிடிப்போம். நேத்து கூட சொன்னார். காலைல நேரத்தோட வாங்க. பட்டணத்துல இருந்து ரெண்டு பேர் வராங்க, அவங்களை மேல கூட்டிட்டு வரணும்னு."

சற்று நேரம் மௌனம்..

"இந்த செயின் நல்லா இருக்கா?" அந்தப் பெண் பேச்சை மாற்றியது.
"ரொம்ப"
"அப்பா இன்னைக்கு காலைல தான் வாங்கிக் குடுத்தார். யார்ட்டயும் சொல்ல வேண்டாம்னு சொன்னார். நீங்க சொல்ல மாட்டீங்களே?"

"ச்சே! ச்சே! என்னை முழுசா நம்பலாம்"
"சத்தியமா?"

....

"தலைல அடிச்சு சத்தியம் பண்ணிட்டு வந்தேன் மேடம்!"

"யார் தலைல?"

"அட! தேறிட்டீங்களே ? கவலையே படாதீங்க. எப்போ அவங்கப்பன் professional பூச்சாண்டின்னு தெரிஞ்சிதோ அப்போலேர்ந்து அந்தப் பொண்ணு மேல ஒரு சகோதர பாசம் மாதிரி, அவ்வளவுதான்.சரி, நீங்க போன விஷயம் என்னாச்சு?"

"விஷயம்? ஏகப் பட்டது இருக்கு"

(தொடரும்)

ஒரே ஒரு ஊரிலே..(4)

"ரு சமயம் சிவன் தலைல இருந்த கங்கை அம்மனுக்கு கர்வம் வந்துடுச்சாம். தான் சிவனை விட ஒசத்தின்னு. உடனே சிவன் சாபம் குடுத்துட்டாராம் பூமியிலே போய் ஐயாயிரம் வருஷம் தவம் பண்ணுன்னு. அப்படி மலையூருக்கு வந்து அம்மன் தவம் பண்ண ஆரம்பிச்சாளாம். அப்போ அம்மனுக்கு காவலுக்கு சிவகணங்கள் சில பேரும் வந்து இந்த மலையிலயே தங்க ஆரம்பிச்சாங்களாம். இந்த ஊர்க்காரங்க அந்த சிவகணங்கள் வழி வந்தவங்கன்னு ஐதீகம்."

"நாங்க யாருமே இந்த ஊரை விட்டு வேற எங்கேயும் குடி போயிட முடியாது. வேத்து ஊர்க்காரங்க வேணும்னா இங்க வரலாம். எங்க பொண்ணுங்களைக் கூட ரெண்டாம் தாரம், மூணாம் தாரமா இந்த ஊர் காரங்களுக்குத்தான் குடுப்போம்."

வினுவும் பானுவும் ராமர் அளித்த டிபன் காப்பியை காலி செய்தவாறே நோட்ஸ் எடுத்துக் கொண்டனர் .
"ரொம்ப ஆச்சர்யமா இருக்கு, இல்ல மேடம்?"

தலையாரி தொடர்ந்தார்,"படிப்பு கூட இந்த தலைமுறைல தான். நத்தம்ல கவர்மெண்டு இஸ்கூல் இருக்குது. அதுல பத்தாம்ப்பு வரை புள்ளைங்க படிக்குதுங்க. அதுக்கு மேல படிக்கணும்னா திண்டுக்கல் போகணும். அதுனால யாரையும் அனுப்பறது இல்ல."

"அட என்னப்பா! நம்ம மூக்கன் போயிருக்கானே?" என்று டம்ளர், தட்டுக்களை எடுத்துப் போக வந்த பெண் (தலையாரியின் பெண் போலும்) சொன்னாள்.

"நீ போ உள்ள" என்று அதட்டினார் ராமர்.

"அது உண்மைதான். பேப்பர்ல கூட வந்துச்சாமே! அந்த மூக்கன் பய பத்தாம்புல ஏதோ நெறிய மார்க் எடுத்தானாம். இருளான் தான் எதோ உதவித்தொகையோ என்னமோ ஏற்பாடெல்லாம் செஞ்சு, அவங்க குடும்பத்தை திண்டுக்கலுக்கு கூட்டிப் போனான். அப்பவே சொன்னோம், ஊர்க் கட்டுப்பாடு, மீற வேணாம்னு.
அவன் வெளியூர்தானே, மதிக்கல"

"இருளான் இந்த ஊர் இல்லையா?"

"இல்லீங்க. வேற ஊர். ஆனா மலைசாதிதான். ஒரு அஞ்சு வருஷம் இருக்கும் இங்க வந்து. வந்ததுலேர்ந்து நெறைய விஷயங்கள்ள புதுசா பேச ஆரம்பிச்சான்.பச்ச் .. அவனைச் சொல்லியும் குத்தம் இல்லையே? காலத்துக்கு ஏத்தாப்பலே நாமும் மாறணும் இல்லையா? புள்ளைங்களோட எதிர்காலத்தப் பத்தி யோசிக்கணுமே?"

சட்டென்று பேச்சு நின்றது.
"சரி, சரி. கோயிலுக்கு போகணும்னு சொன்னீங்க? மணி பதினொன்னு. பூசாரி நடை சாத்தறதுக்கு உள்ளர போயிடுங்க" என்று அவசரப் படுத்தினார்.

....

பிரம்மாண்டமான கோவில். வாசலில் ஏதோ தெய்வம் கத்தியுடன் மிரட்டியது. மற்றொரு கையில் அக்னி குண்டம்.

"மேடம்! நாம நாலு மணிக்குள்ள கிளம்பினாத்தான் லாரிய புடிச்சு, டிரைன புடிச்சு, பஸ்ஸ புடிச்சு, ஆட்டோவ புடிச்சு ஊர் போய் சேர முடியும். இந்த பூசாரி, ஆசாரி கிட்டயெல்லாம் நான் வரல. எனக்கு ஒத்துக்காது.வேணும்னா இந்தக் கோவில் பக்கத்துல வீடு இருக்கே, அதுக்குள்ள ஒரு சுமாரான பிகர் இருக்கு. அது கிட்ட கொஞ்ச நேரம் கடலை போடறேன். நீங்க சீக்கரம் போய் மந்திரிச்சிகிட்டு வாங்க"
என்று கழன்று கொண்டான்.

(தொடரும்)

ஒரே ஒரு ஊரிலே..(3)

முன்கதை:
ஒரே ஒரு ஊரிலே

..................
"என்ன மேடம்! திடீர்னு குண்டத் தூக்கிப் போடுறீங்க!" என்று அலறினான் வினு.

"உன் வீட்டுலே தீ புடிச்சா என்ன செய்வ?"

"ஐயோ அம்மான்னு அலறுவேன்.. ம்ம்.. போர்வை, சாக்கு , தண்ணி ஏதாவது வச்சு தீயை அணைக்க டிரை பண்ணுவேன்..முடியாட்ட உசிரை மட்டுமாவது காப்பாத்திக்க எதாவது ஜன்னலை உடச்சு வெளியே குதிச்சிடுவேன்"

"ரைட்! அப்படி எதுவும் நடந்ததுக்கான அறிகுறியே இல்லையே?"

"இல்லையா?"

"ஒண்ணு, பக்கத்து வீட்டுல சத்தமே கேக்கலை. இவவளவு பெரிய வீட்டுல ஒரு மூலையிலே தீ புடிச்சா, இருளான் மாதிரி ஒரு ஹெல்தியான, நார்மலான ஆசாமி சுலபமா அதை நிறுத்தி இருக்கலாம். குறைந்த பட்சம், தன் உயிரை மட்டுமாவது காப்பாத்தி இருக்கலாம். இல்லையா?"

"ஒரு வேளை ராத்திரி ஏதாவது "எக்கச்சக்கமா" சாப்பிட்டு இருப்பரோ? "

"Possible. இன்னொண்ணு: சமையல் அறையிலே ஆரம்பிச்ச தீ தானா வீடு முழுக்க பரவினது மாதிரி தோணலை. ஸ்பொரடிக் ஆகத்தான் பரவி இருக்கு. பெட் ரூமிலே பேப்பர் குவியல், துணி அலமாரி இப்படி வேணும்னே தீயை அங்கங்கே வேகமா பரவ வழி செய்யப்பட்டிருக்கு.ரைட்?"

"ம்ம்"

"நாம இங்கே கொஞ்ச நேரம் இருந்து வேற ஏதாவது விஷயம் கிடைக்குதான்னு பாப்போம்."

"மேடம்! நீங்க துப்பு துலக்குவீங்களோ,பல் துலக்குவீங்களோ, முதல்லே தண்ணி எங்கயாவது கெடைக்குதான்னு பாக்கணும்," என்று பாட்டிலில் இருந்த கால் சொட்டு தண்ணீரை கவிழ்த்தான்.
..

தூரத்தில் ஒரு பெட்டிக் கடை டீயும் பன்னும் விருந்தோம்பிக் கொண்டிருந்தது.
வினு "ஏம்பா, பிஸ்லேரி இருக்கா?" என்றான்.
"பன்னு தாங்க இருக்கு"
"சுத்தம்"
"தண்ணி வேணும்னா சுனை இருக்குதுங்க. அங்கே புடிச்சிக்கலாம்." என்று ஆறுதல் சொன்னார் ஒரு கஸ்டமர்.

"தேங்க்ஸ்" என்று வினு திரும்ப,
"ஆனா சுனையில பாம்புங்க சாஸ்தி, பாத்துக்குங்க"என்று கடைக்காரர் சுவாதீனமாக டீ ஆற்றியபடி சொன்னார்.

"ச்சே! இந்த ஊருல உசிருக்கு ஆபத்து இல்லாம தண்ணி குடிக்க வழியே இல்லையா?"

வினுவின் புலம்பலுக்கு பதில் சொல்வது போல்,"அட! இங்கதான் இருக்கீங்களா! ஏதாச்சும் சாப்புடீங்களா? வாங்க, நம்ம வீட்டுக்கு போலாம்" என்று அழைத்துப் போனார் ராமர்.

(தொடரும்)

Wednesday, June 10, 2009

வைத்தியம் பார்க்கலையோ வைத்தியம்!!

ஒரு காலத்தில் ஜென்டூ பாம் தயாரிப்பாளர்கள் என்னவோ தாங்கள் தான் உலகில் உள்ள அத்தனை வியாதிகளையும் குத்தகைக்கு எடுத்த மாதிரி கூவி கூவி விளம்பரம் செய்வார்கள்:
"தலைவலியா? உடல் வலியா? ஜலதோஷமா?வேறு எதாவதா" என்று.

இப்போது எந்த வியாதியை எடுத்தாலும் அதற்கு ஜண்டு பாமுக்குப் போட்டியாக ஏகப்பட்ட பேர் வந்து விட்டார்கள்.
தலைவலியா? அலோபதி மாத்திரை. வேளைக்கு ரெண்டு. அதோடு இட்ஸ் கான். அப்புறம் அந்த மாத்திரையை சாப்பிட்டதற்குப் பிராயச்சித்தமாக வேறு ஒரு பத்து மாத்திரைகள் ஒரு வாரம் சாப்பிடவும்.

வேண்டாமா? பிடி ஹோமேயோபதி. ஓரு பொட்டலத்தில் லாகிரி வஸ்து போல் இருக்கும் ஒரு பொடியை அப்படியே உள்ளே தள்ளவும். அப்புறம் எறும்பு முட்டை மாத்திரைகளை ஒரு வருஷம் சாப்பிடவும். உங்களுக்கென்ன, உங்கள் பரம்பரைக்கே தலைவலி வராது.

வேண்டாமா? யுனானி? சித்தா? ஆயிர்வேதா? நாட்டு மருந்து?

எதுவுமே வேண்டாமா? புரிந்தது. "அல்டர்நெடிவ் மெடிசின்" காரரா நீங்கள்?

ரெய்கி : படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று சவால் விடுபவர்கள். இந்த டாக்டர்கள் உங்களை பரிசோதிக்க வேண்டாம். ஒரு மின்னஞ்சல் மூலம் தகவல் கொடுத்தால், இருந்த இடத்தில் இருந்தே எங்கோ இருக்கும் உங்களை குணப்படுத்துவார்கள். உங்களுக்கு சரியாகப் போகவில்லை என்றால், நீங்கள் சரியான முறையில் படுத்துக் கொள்ளவில்லை. உங்களுக்கு (கவனிக்கவும் :உங்களுக்கு) பயிற்சி தேவை என்று பொருள்.

யோகா: தலைவலிக்கு மருந்தும் ஆச்சு. "யோகா ரத்னா" என்று சர்டிபிகேட் கிடைசாப்பலையும் ஆச்சு! அதுக்கப்புறம் நீங்கள் குறித்த கட்டணத்தில் அடுத்தவர் தலைவலியைக் குறைக்கலாம். (உங்களுக்குத் தலைவலி போய் அடுத்தவர்க்குத் திருகுவலி ஆரம்பம்)

ஜெம்மாலஜி: "உங்கள் ராசிக்கு உகந்த கல்லை எங்கள் இடம் இருந்து வாங்கி அணியுங்கள். அப்படியும் வியாதி குணம் ஆகவில்லை என்றால் அந்தக் கல்லாலேயே எங்களை அடியுங்கள்"
என்று தினப்படி டி வியில் வியாபாரம் நடத்துபவர்கள்.

மேற்கண்ட எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் விளம்பரம் ஒன்றை சமீபத்தில் பார்த்தேன். செல் போன் தெரபி! விவரம் தெரிந்து கொள்ள குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டி இருந்ததால், blog எழுத இந்த விவரம் போதும் என்று விட்டு விட்டேன்.

இது தவிர, மணல் தெரபி என்றும் ஒன்று இருப்பதாக அறிகிறேன். மெரினாவுக்கு நீங்களும் உங்கள் வியாதியும் காற்று வாங்கச் செல்லுங்கள். அப்படியே ஒரு குழியை வெட்டிக் கொள்ளுங்கள். அந்தக் குழிக்குள் ஒரு அரை மணி நின்றால் வியாதி அப்படியே மண்ணுக்குள் போய்விடும்! நேற்று மெரினாவில் நான் கண்ட காட்சி இது!

என்ன ஆனாலும் பாட்டி வைத்தியம் போல் வரவே வராது. என் பாட்டி (அப்பாவின் அம்மா) க்குத் தலைவலி . என் பெரியப்பா முறையாக ரெய்கி கற்றவர். "நான் குணப்படுத்துகிறேன்" என்று கால் நீட்டிப் படுத்துக் கொண்டார். பாட்டிஇந்தக் கூத்தைச் சற்று நேரம் வேடிக்கை பார்த்தார். "இரு" என்று உள்ளே சென்று, ஐந்து நிமிஷத்தில் "இதச் சாபிட்டா அஞ்சு நிமிஷத்துல சரியாயிடும்" என்று இரண்டு டம்ளரில் ஏதோ திரவத்துடன் வந்தார். அது என்ன திரவம்? காபி!!

இது அல்லவோ வைத்தியம்!

Tuesday, June 9, 2009

என்ன கொடுமை சார் இது!

Panneersoda ஒரு வாரமா அப்டேட் ஆகலியே என்ற வேதனையில் உயிரை விட்டவர்கள் எண்ணிக்கை இன்னும் சரி வரத் தெரியாவிட்டாலும், "வருமுன் காப்போம்" என்று இந்தப் பதிவு.

உண்மையில் ஒரு திருமணத்திற்காக சென்னையில் ஒரு வாரமாக டேரா அடித்திருப்பதால் இந்த gap.

இந்து கல்யாண வைபோகத்தில் எனக்கு ஆச்சர்யம் ஏற்படுத்தும் ஒரு விஷயம், மணப்பெண்ணை அப்பா மடியில் உட்கார வைப்பது. உட்காரத்தான் வைக்கிறார்கள், "ஒரு இடத்தில் ஆடாமல் அசையாமல் உட்காரவும்" என்று சொல்லவாவது செய்கிறார்களா, அதுவும் இல்லை.
என்னதான் ஆயிரம் காலத்துப் பயிர் என்றாலும், அதற்காக ஒரு டிராக்டர் ஐ ஒரு அப்பாவி ஜீவன் மேல் அரைமணி நேரம் ஏற்றி உருள விடுவது, மனிதத்தன்மை அற்ற செயல்!
அந்தப் பெண்ணும் ஐந்து நிமிஷத்துக்கு ஒரு முறை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சாய, வண்டி குடை சாய்வது மாதிரி அப்பனும் பேலன்ஸ் இல்லாமல் ஆடுவது பரிதாபம்!

இந்தப் பழக்கம் அமலுக்கு வந்த புதிதில் மணப்பெண்ணின் வயது ஐந்து. இன்று மணப்பெண்ணின் சராசரி வயது இருபத்தைந்து. சராசரி எடை?
சராசரியை விடுங்கள், சராசரிக்கும் சற்றுக் கூடுதலான எடை கொண்ட பெண்ணைப் பெற்ற ஜீவன்கள் நிலைதான் இன்னும் மோசம்!

வலி தாங்காமல் அப்பன் அரற்ற, அந்த அம்மா "எம் புருசனுக்கு ஆனந்தக் கண்ணீர்" என்று சதாய்க்க, ஜென்மவிரோதப் பார்வை பார்த்தார்.
"உம் பொண்ணுக்குப் போட்ட சாப்பாட்டுல கால் பங்காவது எனக்குப் போட்டிருந்தா இன்னைக்கு இப்பிடி ரோடு ரோல்லர்ல அடிபட்ட நூடுல்ஸ் மாதிரி ஆகி இருப்பேனா?"

என்னக் கொடுமை சார் இது?

Saturday, June 6, 2009

ஒரே ஒரு ஊரிலே..

வேணும் எனக்கு! மெகா சீரியல்களை ஈவு இரக்கம் இல்லாமல் நக்கல் அடித்த பாவம். ஒரு கதையை ஆரம்பிப்பது சுலபம். அதைப் பேணி வளர்ப்பது எவ்வளவு கஷ்டம்! இனி எந்த அட்டு சீரியலையும் ஒரு அளவுக்கு மேல் நக்கல் அடிக்க மாட்டேன் என்று "உறுதி hooruhiren"

.................

புகையும் கூடி இருந்த கூட்டமும் யாரும் சொல்லாமலேயே இருளானின் வீட்டை அடையாளம் காட்டின. வாசலில் கருகிய உடல் போர்த்தப் பட்டு இருந்தது. ஒரு கிடா மீசைப் பெரியவர் "அடுத்து ஆக வேண்டிய காரியங்களுக்கு" உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார்.
பானு பெரியவரிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டாள்.

"வாங்க! இருளான் சொன்னான்! பாவம் சின்ன வயசு"
"முகத்தைப் பார்க்கலாமா?"
"பாருங்க!"
கழுத்து வரை துணி விலக்கி முகம் காட்டப் பட்டது.

"கோஷ்" என்று வினு வாய்பொத்தினான். பானு digicam இல் பதிவு செய்தாள்.
உள்ளே சென்று வீட்டைப் பார்வை இட்டனர். ஹால் , கிச்சன், படுக்கை அறை என்று மூன்றே அறைகள். சற்றே பெரிய வீடு.தீ அங்கங்கே அட்டகாசம் செய்திருந்தது.

அவர்களுடன் வந்த பெரியவர், "என் பேரு ராமர். தலையாரி." என்றார்.
" எப்படி நடந்ததுன்னு.."
"சமையல் உள்ளுளே கெரசின் கொட்டி இருக்குது."

படுக்கை அறையில் புத்தகங்கள் குவியலாக எரிந்து போயிருந்தன.அலமாரி திறந்து, துணிகள் எல்லாமும் சிதறி கருகி இருந்தன.

"Third-degree burns. நரம்புகளை நேரடியாக அழிப்பதால் வலியே தெரியாது , தெரியுமோ?"

"மேடம், ப்ளீஸ்! சகிக்கலை."

இருபது வீடுகளுக்கு மலையூரில் இடம் ரொம்பவே அதிகம். ஒவ்வொரு வீட்டை சுற்றியும் இயற்கை தோட்டம் அமைத்திருந்தது. எந்த வீட்டின் வாசலும் இன்னொரு வீட்டின் வாசலை நேருக்கு நேராக சந்திக்கவில்லை.

இருளானின் பக்கத்து வீட்டில் ஒரு பெண்ணும் அவள் மகனும் மட்டுமே இருந்தார்கள்.

"வெள்ளிக்கிழமை ராத்திரி ஊருல ஆம்பளைங்க எல்லாரும் கங்கை அம்மன் கோயில் போயிடுவாங்க. பொண்ணுங்களும், சின்னப் பிள்ளைங்களும் போறதில்ல. நாங்க ரெண்டு பெரும் வீட்ல தான் இருந்தோம். நடுநிசிக்கப் புறம் ஆளுங்க கோவில்ல இருந்து திரும்ப வர்ற சத்தம் தாங்க கேட்டுச்சு. வேற எந்த சத்தமும் கேக்கல. காலைல புள்ள பள்ளிக்கொடத்துக்கு கெளம்புச்சு. அப்பத்தாங்க பாத்தோம், வீட்டுக்கு உள்ளார ஒரே பொகையா வந்துச்சு."

"மணி என்ன இருக்கும்"
"ம்ம்.. அஞ்சு மணி இருக்கும்க."

இருளானின் வீட்டைச் சுற்றி இருவரும் நடந்து வந்தார்கள். "மேடம்! இந்த விபத்தை பத்தி எடிட்டர்கிட்ட சொல்லியாச்சா?" என்றான் வினு.

"விபத்தா? இதுவா? டோன்ட் பீ சில்லி" என்றாள்.

(தொடரும்)

Tuesday, June 2, 2009

ஒரே ஒரு ஊரிலே..

"ஆமைக் கதை எழுதலாமா" என்று தங்கவேலு மாதிரி நான் யோசித்தது இல்லை.சமீப காலமாக கணேஷ் - வசந்த் நாவல்களை அதிகம் படித்ததால் ஏற்பட்டிருக்கும் பக்க விளைவு!Heart-felt apologies to Sujatha.

முன் குறிப்பு: உண்மையான மலையூரைப் பற்றி விகடனில் வெளியான உண்மையான கவர் ஸ்டோரியின் அடிப்படையில் முற்றிலும் கற்பனையான கதை...

........

லாரி மலையடிவாரத்தில் நின்றது.
"தேங்க்ஸ் பாஸ்" என்றவாறே shoulder bag ஐ மாட்டிக் கொண்டு கீழே குதித்தான் வினு. குதித்த வேகத்தில் தரைப்புழுதி reebok இன் மேல் செம்பட்டை சாயம் போர்த்தியது.
"தேங்க்ஸ்" சொல்லி handbag சகிதம் பானுவும் இறங்கினாள்.
வினு கர்சீப்பால் முகத்தை ஒத்தி,"ச்சே! பேசாமல் ஆடு மேய்க்கப் போயிருக்கலாம். இந்த வெயில்ல, ஒரு பொட்டல் காட்டுல இருக்கற ஒரு இத்துப் போன கிராமத்துக்கு பேட்டி எடுக்கப் போகனும்னு தலை எழுத்து!" புலம்பினான். பதிலுக்கு ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு நடந்தாள் பானு.

எல். மலையூர்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கிராமத்தில் இருந்து 4 K.M ஒரு மலைப் பாதையில் பயணித்தால் உங்களை அன்புடன் வரவேற்கும். மொத்தமே இருபது குடும்பங்கள் தான்.தேர்தல் நேரத்தில் இது போன்ற தக்குனூன்டு கிராமங்களைப் பற்றி நியூஸ் போடுவது பத்திரிகை தர்மம்.

"மேடம்! கொஞ்சம் நில்லுங்க" என்று bisleri யை திறந்து இரண்டு மடக்குகளில் பாதி பாட்டிலை காலி செய்தான். பானுவை மரியாதை நிமித்தம் மேடம் என்று அழைத்தாலும், இருவரும் ஒரே வயது வரம்பைச் சேர்ந்தவர்கள் தான். Right side of 25.இன்னும் சீனியர்களையும் பேர் சொல்லி அழைக்கும் MNC கலாச்சாரம் அவர்கள் பத்திரிகையில் நுழையவில்லை என்பதால் "அடக்கி " வாசித்தான்.

"நம்மளை கூட்டிட்டு போக ஒரு மலையூர் மம்மட்டியான் வரணுமே, இன்னும் காணோமே?" என்றான் வினு. "அவர் பேர் இருளான்" என்றாள் பானு.

கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு, அந்த மலைப்பாதையில் அவர்களாகவே நடக்க ஆரம்பித்தார்கள்.சுமார் அரை மணி நேரப் பயணத்தில் முகம் தெரியாத அந்த இருளானை வினு மூச்சிரைக்க சபித்தான்.

ஊர் வந்ததும், கண்ணில்பட்ட "பெரிசு" ஒன்று,"யாரய்யா நீங்க? ஊருக்குள்ளார செருப்புக் காலோட வர்றது?" என்றது.
"நாங்க பத்திரிகைகாரங்க. இங்க இருளான் வீடு?" என்றாள் பானு.
"அட! அதுக்குள்ள விஷயம் போயிடுச்சா?"
"என்ன?"
"இருளான் செத்துப் போயிட்டான். வீடு தீ புடிச்சிகிச்சி" என்றார்.

- (தொடரும்)